.webp)
இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இஸ்லாத்தின் 5 கடமைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக வசதிபடைத்த ஒருவர் தேக ஆரோக்கியத்துடன் இருந்தால் அவர் கட்டாயமாக புனித கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.
உலகளாவிய ரீதியில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகையான ஈதுல் அல்ஹா எனப்படும் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் இன்றாகும்.
இற்றைக்கு சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறை தூதர் இப்ராஹிம் நபி அவர்களின் மனைவி மூலம் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த ஆண் மகனான இஸ்மாயில் நபியை இறை கட்டளையின் பிரகாரம் பலியிட துணிந்த வரலாறு இதன்போது கூரப்படுகின்றது.
நபி இப்ராஹிம் அவர்கள் தமது அன்புக்குரிய மகன் இஸ்மாயில் அலி ஸ்லாம் அவர்களை பலியிட துணிந்த போது இறைவன் வானவர் ஜிப்ரி அலி சலாம் மூலம் அதனை தடுத்து ஒரு ஆட்டை இறக்கி வைத்து அதனை பலியிடுமாறு கட்டளையிட்டார்.
இறை தூதுவர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.