துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

by Staff Writer 05-02-2025 | 9:21 AM

Colombo (News 1st) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் எல்பிட்டியவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றமிழைக்க தயாராகவிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்வதற்கு முயற்சித்தமை உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் மட்டக்குளி கரதியானவத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் சந்கேநபர் கைதாகியுள்ளார்.