Colombo (News 1st) முல்லைத்தீவில் இருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களுக்கு இன்று(17) மாலை வரை பயணிக்க வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களின் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சிலாபம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகள் கரையை வந்தடையும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.