தபால் மூல வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைப்பு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைப்பு - தேர்தல் ஆணைக்குழு

by Staff Writer 07-10-2024 | 3:58 PM

Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் இன்று(07) தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பொதிகள் அரச நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L. ரத்நாயக்க குறிப்பிட்டார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த தினத்தில் தமது வாக்குகளை செலுத்தமுடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்குகளை செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 12ஆம் திகதி தபால் அலுவலகங்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், அவை எதிர்வரும் 17 முதல் 20ஆம் திகதி வரை பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஏனைய செய்திகள்