ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா

2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு

by Staff Writer 25-07-2024 | 7:58 AM

Colombo (News 1st) 2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். 76 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச்சென்றதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேவையுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தமது X தளத்தில் #CrushCorruption எனும் ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். 

நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையை முன்னேற்றுவதற்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு சரத் பொன்சேகா நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.