Colombo (News 1st) கட்சியின் ஒழுக்கத்தை மீறி ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கட்சியின் ஒழுக்காற்றுக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் G.L.பீரிஸ், கலாநிதி நாலக கொடஹேவா, டிலான் பெரேரா, வசந்த யாப்பா பண்டார, கலாநிதி உபுல் கல்பத்தி, K.P.S.குமாரசிரி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலேயே விசாரணை நடத்தவுள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்களின் நியாயப்படுத்தலை கடிதம் மூலம் கேட்டறிந்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பேராசிரியர் G.L.பீரிஸ் தலைமையிலான பொதுஜன பெரமுனவின் 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கடந்த 5 ஆம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் உடன்படிக்கை செய்துகொண்டனர்.