Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க சுவீடன் சென்றுள்ளார்.
அங்கு நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சிநேகபூர்வ கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளார்.
நெக் ஓலா மற்றும் ஸ்டொக்ஹோம் நகரங்களில் இந்த சந்திப்புகள் நடைபெறவுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சுவீடனுக்கான வௌிநாட்டுக் குழு இந்த சந்திப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.