முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று(24) ஆரம்பம்

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று(24) ஆரம்பம்

by Staff Writer 24-04-2024 | 7:55 AM

Colombo (News 1st) தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று(24) ஆரம்பமாகின்றது.

கடந்த 10ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

இதனிடையே, பாடசாலைகளுக்கு எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.