பசில் - ஜனாதிபதி மீண்டும் கலந்துரையாடல்

பசில் - ஜனாதிபதி இடையே மீண்டும் கலந்துரையாடல்

by Staff Writer 24-04-2024 | 8:26 AM

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையே மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் தேர்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையே இதற்கு முன்னரும் 3 கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதன்போது அடுத்தகட்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இருவருக்கிடையிலும் கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன.