ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

by Staff Writer 24-04-2024 | 11:13 AM

Colombo (News 1st) ஈரான் ஜனாதிபதி, கலாநிதி இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(24) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி, உமாஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதுடன், இன்று(24) பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

பாகிஸ்தானுக்கான 3 நாள் விஜயத்தை நிறைவு செய்த அவர், இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.