ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் பலி

மூதூரில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் 8 வயது சிறுவன் பலி

by Bella Dalima 19-04-2024 | 3:30 PM

Colombo (News 1st) மூதூர் - பாலத்தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலத்தோப்பூர் பகுதியை சேர்ந்த 8 வயது  சிறுவனே கழுத்தில் கயிறு இறுகியதில் உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.