சிறைச்சாலையில் இருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

by Bella Dalima 29-03-2024 | 5:14 PM

Colombo (News 1st) அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

இன்று (29) முற்பகல் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலையின் உணவகத்தில் இருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பிச்சென்ற கைதிகளைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.