Colombo (News 1st) தியத்தலாவ Foxhill கார் பந்தயத்திடலில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அங்கு பதிவான காணொளிகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினால் விசாரணை நடத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி தியத்தலாவயில் இடம்பெற்ற Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.