.webp)
-559312.jpg)
Colombo (News 1st) மொனராகலை - கும்புக்கனை பாலத்தில் இன்று(21) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியிலுள்ள கும்புக்கனை பாலத்தில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மற்றும் டிராக்டர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
டிராக்டர் ரக வாகனத்தில் பயணித்த 08 பேரில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளை சேர்ந்த, 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடைய ஐவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் மற்றும் டிராக்டர் ரக வாகனங்களின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
