.webp)
-552967.jpg)
Colombo (News 1st) அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று(12) சந்திப்பு இடம்பெற்றது.
ஜூலி சங் தமது பதவிக்காலத்தில் அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டு தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக தமது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து எதிர்வரும்16ஆம் திகதி அவர் நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.
அத்துடன் டித்வா சூறாவளியினால் மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தமது நன்றியை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டு தெரிவித்தார்.
2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற ஜூலி சங், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு உட்பட இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல முக்கிய மைல்கற்களில் தனது தலைமைத்துவத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
