ஆற்றில் கவிழ்ந்த கார் : சிறுமி உள்ளிட்ட மூவர் பலி

ஆற்றில் கவிழ்ந்த கார் : சிறுமி உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

by Staff Writer 27-11-2025 | 1:08 PM

Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால் அம்பாறை சாய்ந்தமருது - கரைவாகுப்பற்று ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

காரில் பயணித்தவர்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 62 வயதுடைய கணவன், 59 வயதுடைய மனைவி மற்றும் அவர்களின் 06 வயதுடைய பேரப்பிள்ளை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.