மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 24-11-2025 | 4:14 PM

Colombo (News 1st)  ரம்புக்கனை - மாவனெல்ல வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி மீது நேற்றிரவு(23) மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்துள்ளனர்.

பொலிஸார், இராணுவத்தினர், தீயணைப்புப் பிரிவினர் , பொதுமக்கள் உள்ளிட்டோர் இணைந்து முச்சக்கர வண்டியில் சிக்கியிருந்தோரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ள நிலையில், 57 வயதான ஆண், 48 வயதான பெண் மற்றும் இரண்டரை வயதான பெண் குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய செய்திகள்