சஷீந்தர ராஜபக்ஸ பிணையில் விடுவிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்தர ராஜபக்ஸ பிணையில் விடுவிப்பு

by Chandrasekaram Chandravadani 14-10-2025 | 4:12 PM

Colombo (News 1st)  முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்தர ராஜபக்ஸவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று(14) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 03 சரீரப் பிணைகள் மற்றும் 50,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகாவலி அதிகார சபைக்குட்பட்ட செவனகல பகுதியிலுள்ள காணியில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள் அரகல போராட்டத்தின் போது சேதமாக்கப்பட்டதாக தெரிவித்து 88,50,000 ரூபா நட்டஈடு பெற்ற சம்பவம் தொடர்பில் சஷீந்தர ராஜபக்ஸ கடந்த ஆகஸ்ட் மாதம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.