நுவரெலிய தபால் நிலையத்தை நவீனமயப்படுத்த அங்கீகாரம்

நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை நவீனமயப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

by Staff Writer 25-06-2025 | 10:35 PM

Colombo (News 1st) நுவரெலியா தபால் நிலைய கட்டடம் மற்றும் காணியை நவீனமயப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நுவரெலியா தபால் நிலைய கட்டடம் மற்றும் காணியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

குறித்த கட்டடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைப்பதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு தபால் ஊழியர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்த கட்டடத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னரைப் போன்று மேற்கொண்டு செல்வதற்கும் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.