கடந்த 15 நாட்களில் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

by Staff Writer 18-06-2025 | 10:48 PM

Colombo (News 1st) இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10,93,659 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 15 நாட்களில் மாத்திரம் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களில் அதிகளவானோர் இந்தியா, பிரித்தானியா, பங்களாதேஷ், சீனா, ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தே வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.