.webp)
திருகோணமலை - குச்சவௌி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிலாவௌியிலிருந்து இறக்கக்கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று(16) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சடலம் நிலாவௌி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குச்சவௌி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.