பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

by Staff Writer 09-06-2025 | 12:43 PM

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் இருந்து அதன் விசாரணைப் பிரிவு பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ். மொஹான் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.கே. பண்டார, அம்பாறை பிராந்தியத்தில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.டி. அனுரங்க கல்கிசை பிராந்தியத்தில் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ. எல்.ஏ. பிரசன்னவுக்கு எல்பிட்டிய பிராந்தியத்தில் இருந்து நுகேகொட பிரந்தியத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பீ. டீ. தீப்தி குமார நுகேகொடை பிராந்தியத்தில் இருந்து எல்பிட்டிய பிராத்தியத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 08 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.