பாணந்துறையில் துப்பாக்கிச்சூடு

பாணந்துறையில் துப்பாக்கிச்சூடு

by Staff Writer 29-05-2025 | 4:02 PM

Colombo (News1st)பாணந்துறை வேக்கட பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலைய உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.