அலதெனிய பஸ் விபத்து தொடர்பில் விசாரணை

கண்டி - அலதெனிய பஸ் விபத்து தொடர்பில் விசாரணை

by Staff Writer 13-05-2025 | 5:22 PM

Colombo (News 1st) கண்டி - அலதெனிய, குளுகம்மன பஸ் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுற்றுலா சென்ற தரப்பினரே நேற்றிரவு(12) விபத்திற்குள்ளானதுடன் விபத்தின் ​போது பஸ்ஸில் 38 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 37 பேரும் பேராதனை, கண்டி மற்றும் தித்தபஜ்ஜல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.