வாகன ஒழுங்குபடுத்தல் தொழிற்சாலை

வாகன ஒழுங்குபடுத்தல் தொழிற்சாலையை திறந்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

by Staff Writer 17-09-2024 | 11:14 PM

Colombo (News1st) வாகன ஒழுங்குபடுத்தல் தொழிற்சாலை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குளியாப்பிட்டியவில் இன்று(17) திறந்து வைக்கப்பட்டது.

வெஸ்டர்ன் ஒடோமொபைல் எசெம்பிலி தனியார் நிறுவனத்தின் தொழிற்சாலை  இன்று குளியாபிட்டியவில்  திறக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.  

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதத்தில் இலங்கை முதலீட்டு நிறுவனத்தினால்  வெஸ்டர்ன் ஒடோமொபைல் எசெம்பிலி தனியார் நிறுவனுத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.