Colombo (News 1st) களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று(24) முற்பகல் தீ பரவல் ஏற்பட்டது.
மாவட்ட செயலகத்தின் கீழ் தளத்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை நகர சபையின் தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்கசிவினால் தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.