.webp)
Colombo (News 1st) பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாக்கிற்காகவும் போராடவுள்ளதாக பிரதமர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இது உரிய நேரத்திற்கு முன்னரே நடத்தப்படும் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.