மலேசிய ஹெலிகொப்டர் விபத்தில் 10 பேர் பலி

மலேசிய கடற்படை ஹெலிகொப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ; 10 பேர் உயிரிழப்பு

by Staff Writer 23-04-2024 | 10:41 AM

Colombo (News 1st) மலேசியாவின் கடற்படை அணிவகுப்பிற்கான ஒத்திகையின் போது, நடுவானில் 2 ஹெலிகொப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு ஹெலிகொப்டரின் இறக்கை, அருகில் பறந்துகொண்டிருந்த மற்றைய ஹெலிகொப்டருடன் மோதியதை அடுத்து அவையிரண்டும் தரையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளன.

மலேசியாவின் Lumut நகரில் அந்நாட்டு நேரப்படி இன்று(23) காலை 9.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகளுக்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.

HOM M503-3 மற்றும் Fennec M502-6 ஆகிய இரு ஹெலிகொப்டர்களே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன.