மணல் அகழ்வு தொடர்பான தீர்மானம்

மணல் அகழ்வு தொடர்பான தீர்மானம்

by Staff Writer 23-04-2024 | 8:17 AM

Colombo (News 1st) மகாவலி உள்ளிட்ட பிரதான ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களுக்கு அருகில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்காதிருக்க புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தீர்மானித்துள்ளது.

மகாவலி கங்கை கடலில் கலக்கும் திருகோணமலையை அண்மித்த பகுதியில் இம்முறை மணல் அகழ அனுமதி வழங்கப்பட மாட்டாதென பணியகத்தின் தலைவர், பேராசிரியர் ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் கட்டமைப்பை பாதுகாப்பதற்கும் கடல்நீர் நிலப்பரப்பிற்குள் உட்புகுவதைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.