Colombo (News 1st) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சன் ஹையன்(Sun Haiyan) இன்று(23) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தருவதாக தினகரன் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi), நாளை(24) நாட்டிற்கு வருகை தருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.
உமாஓயா பல்நோக்கு திட்டத்தை திறக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரானிய ஜனாதிபதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.