பாகிஸ்தானில் கனமழையால் 87 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கனமழையால் 87 பேர் உயிரிழப்பு; 80 பேர் காயம்

by Bella Dalima 20-04-2024 | 4:25 PM

Colombo (News 1st) பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 87 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் ஏற்பட்ட மின்னல் தாக்கங்கள், கட்டட இடிபாடுகள் மற்றும் வௌ்ளப்பெருக்கு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ பகுதியளவாகவோ சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் 142 மி.மீ மழை பெய்துள்ளதாக துபாய் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயல்பு நிலைக்கு திரும்ப சவாலான பணிகளை எதிர்நோக்கியுள்ளதோடு,  பெருமழையால் ஏற்பட்ட உட்கட்டமைப்பு சேதங்களை சீர்செய்ய அதிகாரிகள் விரைவாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளா்.