Dialog மற்றும் Airtel நிறுவனங்கள் ஒன்றிணைவு

Dialog மற்றும் Airtel நிறுவனங்கள் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஒன்றிணைத்தன

by Bella Dalima 18-04-2024 | 8:07 PM

Colombo (News 1st) Dialog  மற்றும் Airtel நிறுவனங்கள் இன்று தமது செயற்பாடுகளை ஒன்றிணைத்தன.

 Dialog Axiata PLC, Axiata Group Berhad),  Bharti Airtel Limited நிறுவனங்கள், ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இதற்கமைய, Dialog நிறுவனம், Airtel Lanka நிறுவனத்தினை இணைத்துக்கொண்டுள்ளதுடன், 
Bharti Airtel நிறுவனத்திற்கு Dialog  நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படவுள்ளன.

இந்த ஒன்றிணைந்த உடன்படிக்கைக்கு, பங்குதாரர்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.