Colombo (News 1st) எதிர்வரும் சிறுபோகத்தை அடிப்படையாகக் கொண்டு வறண்ட வலயத்தில் 15,000 ஏக்கரில் நிலக்கடலை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கூடிய விளைச்சலை தரக்கூடிய நிலக்கடலை விதைகளை பயன்படுத்த விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறைந்த நீர்ப்பாசன வசதிகளை கொண்ட வயல்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், அதற்காக விவசாயிகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.