Colombo (News 1st) பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்திருந்த தடை இலங்கைக்கு மாத்திரம் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்பின் கீழ் பண்டிகை காலத்தை முன்னிட்டு வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது.