பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா

பெரும்போக நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபைக்கு 1000 மில்லியன் ரூபா நிதி

by Bella Dalima 22-03-2024 | 3:34 PM

Colombo (News 1st) பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்தது. 

திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாவும் விவசாயிகள் நம்பிக்கை நிதியத்திலிருந்து 500 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாக  சபை குறிப்பிட்டது. 

பெரும்போக நெல் கொள்வனவிற்காக வேளாண்மை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு களஞ்சிய சாலைகள் திறக்கப்பட்டுள்ளன

கடந்த ஐந்து நாட்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 9,04,202 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக, 95 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும்   7 வலயங்களிலுள்ள 241 நெல் களஞ்சியசாலைகளை நெற்கொள்வனவிற்காக தாயார் நிலையில் வைத்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்தது. 

நாடு 105 ரூபாவிற்கும் சம்பா 120 ரூபாவிற்கும் கீரி சம்பா 130 ரூபாவிற்குமாக நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.