Colombo (News 1st) காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக மேம்படுத்துவதற்கான அபிப்பிராயங்கள் கோரப்பட்டுள்ளன.
துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன் சந்திர தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் மற்றும் படகுகள் வருகை தரும் வகையில் துறைமுகம் மேம்படுத்தப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.