தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி முல்லைத்தீவு நோக்கி பயணம்

by Staff Writer 19-09-2023 | 7:05 PM

Colombo (News 1st) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி கிளிநொச்சியில் இருந்து இன்று (19) பயணத்தை ஆரம்பித்தது. 

கிளிநொச்சியில் பயணம் ஆரம்பமானபோது பொதுச்சந்தை வர்த்தகர்கள் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு நோக்கி இந்த பயணம் ஆரம்பமானது. 

கடந்த வௌ்ளிக்கிழமை பொத்துவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஊர்தி, மாங்குளத்திலிருந்து நேற்று மாலை கிளிநொச்சியை சென்றடைந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.