.webp)
Colombo (News 1st) அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புதிய களனி பாலத்தை மூன்று கட்டங்களாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் நாளை (01) இரவு 9 மணி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும்
இரண்டாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 8 ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 11 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும்
மூன்றாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 15 ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும் புதிய களனி பாலத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸாரால் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.