ஊடக அடையாள அட்டையுடன் ஒருவர் கைது செய்யப்படுமிடத்து அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் - அமைச்சர் டலஸ்

by Staff Writer 01-10-2021 | 7:07 PM
Colombo (News 1st) ஊடக அடையாள அட்டையுடன் எவரேனும் ஒருவர் ஏதேனுமொரு குற்றத்திற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டால், அதனை அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளருக்கு கட்டாயமாக அறிவிக்க வேண்டுமென ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.