பஸ் அலங்கரிக்க அனுமதியளிக்கும்சுற்றுநிரூபம் இரத்து

பஸ்களை அலங்கரிக்க அனுமதி வழங்கி வௌியிடப்பட்ட சுற்றுநிரூபம் இரத்து

by Staff Writer 13-09-2025 | 7:02 PM

பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் வினோத சுற்றுலாப் பயணங்களுக்காக பஸ்களை அலங்கரிக்கவும் நவீனமயப்படுத்தவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வௌியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபத்தை இரத்துச் செய்து புதிய சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த சுற்றுநிரூபம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.