கிளிநொச்சி வாகன விபத்தில் 55 வயதானவர் பலி..

கிளிநொச்சி வாகன விபத்தில் 55 வயதானவர் பலி..

by Staff Writer 06-08-2025 | 1:18 PM

கிளிநொச்சி - ஏ9 வீதியில் நேற்றிரவு(05 ) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கெப் வாகனம் வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் திருகோணமலை மூதூர் பகுதியை சேர்ந்த 55 வயது நபராவார்.

விபத்து தொடர்பாக கெப் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.