Colombo (News 1st) பாஸ்மதி அரிசிக்கான மாற்றீடாக இரண்டு புதிய அரிசி இனங்களை பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான ஆய்வுகள் வெற்றியளித்துள்ளதாக பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான பிரிவின் பரிந்துரையின் கீழ், பாஸ்மதி அரிசிக்கான மாற்றீட்டு வகை அரிசியை நாட்டில் செய்கையிடுவதற்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.