Colombo (News 1st) Covishield தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக AstraZeneca நிறுவனம் இன்று (08) அறிவித்துள்ளது.
புதிய வகை கொரோனாவை எதிர்கொள்லும் பல தடுப்பூசிகள் தற்போது சந்தைகளில் இருப்பதால், Covishield தடுப்பூசிக்கான தேவை குறைந்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
லண்டன் உயா் நீதிமன்றத்தில் தடுப்பூசி தொடா்பான வழக்கில், கடந்த பெப்ரவரி மாதம் பிரிட்டனை சேர்ந்த AstraZeneca நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், Oxford பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் (Covishield) மிகவும் அரிதான பக்க விளைவாக இரத்தம் உறைதல் ஏற்படலாம் என கூறப்பட்டிருந்தது.
இந்தியாவில் Serum நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட Covishield தடுப்பூசியில் 175 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உலகளவில் தங்களின் Vaxzevria (இந்தியாவில் Covishield) கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக AstraZeneca நிறுவனம் அறிவித்துள்ளது.