சுவீடன் சென்றுள்ள அனுர குமாரவிற்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு

by Bella Dalima 27-04-2024 | 7:42 PM

Colombo (News 1st) மக்கள் சந்திப்பு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  சுவீடனுக்கு சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

கடந்த 25 ஆம் திகதி அனுர குமார திசாநாயக்க சுவீடன் நோக்கி பயணமானார்.

சுவீடனில் உள்ள இலங்கையர்களால் சுவீடன் விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் ஸ்வீடன் வௌிநாட்டு குழுவினரால் ஸ்டொக்ஹோல்ம் நகரில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள  நிகழ்வில் அனுர குமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளார்.

அனுர குமார திசாசாயக்க ஸ்வீடனில் தங்கியிருக்கும் காலத்தில் பல பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கலந்துரையாடல்களில்  பங்கேற்பார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது