Colombo (News 1st) இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்கள் நேற்று சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் ராமநாதபுரம் - மண்டபம் பகுதியை சேர்ந்த 24 மீனவர்கள் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த 24 மீனவர்களும் இம்மாதம் 4 ஆம் திகதி யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மீனவர்கள் தொடர்பான மேலதிக பரிசோதனைகள் மற்றும் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டதையடுத்து, 24 மீனவர்களும் சென்னை விமான நிலையத்தை நேற்று (26) சென்றடைந்தனர்.