சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு ஜூன் மாதத்தில்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை ஜூன் 2 ஆம் திகதி கொழும்பில் நடத்த தீர்மானம்

by Bella Dalima 10-05-2024 | 3:58 PM

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் மாநாடு நடைபெறவுள்ளது.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக பல பிரேரணைகள் இதன்போது நிறைவேற்றப்பட உள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசேகர குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மாவட்ட மட்டத்தில் கொழும்பிற்கு அழைக்கப்படுகின்றனர்.

கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காகவே இவர்கள் கொழும்பிற்கு அழைக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கட்சியில் கடந்த காலங்களில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.  

கட்சியின் நிர்வாக சபை கூட்டத்தின் போது,  மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்சியின் பதில் தவிசாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்தாக அவர் தெரிவித்தார். 

இதற்கமைவாக , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை மாவட்ட மட்டத்தில் கொழும்பிற்கு அழைத்து, அவர்களின் சிக்கல்களை நிவர்த்திப்பதோடு, கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்பதாகவும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.