Colombo (News 1st) மகளிர் உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின், தகுதிகாண் சுற்றின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை எதிர்கொண்ட இலங்கை 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய மகளிர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இந்த நிலையில், தகுதிகாண் சுற்றின் இறுதிப்போட்டி நாளை(07) நடைபெறவுள்ளதுடன், இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.