கோட்டாபய ராஜபக்ஸ நிதிகுற்ற விசாரணைபிரிவிற்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிதி குற்ற விசாரணை பிரிவில் முன்னிலை

by Nadeeshan Meedin 11-09-2026 | 9:38 AM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிதி குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
நிதி குற்ற விசாரணை பிரிவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்களுக்கமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.