இந்திய பாதுகாப்பு அமைச்சர் அடுத்த மாதம் நாட்டிற்கு

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இலங்கைக்கு..

by Staff Writer 25-08-2026 | 10:39 AM

COLOMBO (News 1st) இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.


இதன்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா ஆகியோரை சந்தித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி 'த இந்து' செய்தி வௌியிட்டுள்ளது.


இந்த கலந்துரையாடலின் போது இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்திருந்த போது கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வும் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.