மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்..

நாளை முதல் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 27-07-2026 | 5:00 PM

COLOMBO (News 1st)

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை நாளை(28) முதல் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென திணைக்களம் கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் வீசும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.